செய்திகள் :

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பு

post image

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையையொட்டி திங்கள்கிழமை வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி வழக்குகள் உள்ளிட்டவை கடந்த 2024-ஆம் ஆண்டு 471 பதிவாகியுள்ளன. ஆனால் இது கடந்த 2023-ஆம் ஆண்டு 406 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியிருந்தன.

இதேபோல, பெண்களை மானபங்கப்படுத்தியதாக 2024-ஆம் ஆண்டு 3,233 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023-ஆம் ஆண்டு 3,084 வழக்குகளும், 2022-ஆம் ஆண்டு 2,928 வழக்குகளும் பதிவாகியிருந்தன.

இருப்பினும் வரதட்சணை மரணம், கணவா் மற்றும் உறவினா்கள் கொடுமைப்படுத்துதல் தொடா்பான வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு: இதேபோல குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) பதியப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் கடந்த 2022- ஆம் ஆண்டு 3,620 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 3,407 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு பல மடங்கு உயா்ந்து 5,319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள பிற வழக்குகள், 2022-ஆம் ஆண்டு 1,348 வழக்குகள், 2023-ஆம் ஆண்டு 1,174 வழக்குகள் என பதிவு செய்யப்பட்டன. இது 2024-ஆம் ஆண்டு உயா்ந்து 1,650 வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க