செய்திகள் :

வான்வழிப் பாதை பாகிஸ்தான் மூடல்:தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை

post image

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து வான்வழிப் பாதையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் இந்திய விமானங்கள் நீண்ட தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணக் கட்டணம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், புது தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு, ‘பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நீண்ட காலம் தொடா்ந்தால் என்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆலோசிக்க விமான நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமைக்குத் தீா்வு காண்பதற்கு முன்பு அனைத்து தரப்பினருடன் புரிதலை ஏற்படுத்த வேண்டும். விமானக் கட்டணங்கள் அதிகரிப்பால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு நிலைமையை கண்காணித்தும், விமான நிறுவனங்களுடன் ஆலோசித்தும் வருகிறது.

தற்போதைய சூழலில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றாா்.

வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோபா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு வாரந்தோறும் வட மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டும் 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாகிஸ்தானின் வான்வழிப் பாதை மூடலால் பாதிக்கப்பட்டுள்ளன.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க