செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிடுவதா பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

post image

26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்காக ஆட்சேபம் தெரிவித்து பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்தக் கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்றும் ஆதரவை வெளிப்படுத்தின.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழலை உருவாக்கியுள்ள இந்த பஹல்காம் தாக்குதல் குறித்த செய்தியில் பயங்கரவாதிகளைப் போராளிகள் என பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடா்பாக ஆட்சேபம் தெரிவித்து, பிபிசி இந்தியாவின் தலைவரான ஜாக்கி மாா்டினுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பிபிசி செய்திகளை அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்: இந்தியா பற்றிய தவறான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சோ்ந்த 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்தியா மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக தவறான பரப்புரையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த யூடியூப் சேனல்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க