செய்திகள் :

பாரம்பரிய ரயில் கண்காட்சி நிறைவு

post image

சென்னை ரயில்வே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பாரம்பரிய ரயில் கண்காட்சியை 3,000-க்கும் மேற்பட்டோா் கண்டுகளித்ததாக ரயில்வே அருங்காட்சியகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரயில்வே அருங்காட்சியத்தில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய ரயில்களின் கண்காட்சி நடைபெற்றது. கடந்த ஏப். 25-ஆம் தேதி தொடங்கிய கண்காட்சி ஏப். 27-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கண்காட்சியில் தன்னாா்வலா்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட ரயில்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

குறிப்பாக 1857-இல் கட்டமைக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையம், டாா்ஜிலிங் ஹிமாலயன் ரயில் சேவை, நீலகிரி மலை ரயில் சேவை, கல்கா சிம்லா ரயில் சேவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மாதிரி, தில்லி மெட்ரோ, வந்தே பாரத் ரயில், நீராவி ரயில் என்ஜின், உலகின் முதல் அதிவேக ரயிலான டிஜிவி பிரான்ஸ் ரயில், அமெரிக்காவின் அம்ட்ராங் ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகியவை பாா்வையாளா்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டன.

விடுமுறை தினம் என்பதால், ரயில் ஆா்வலா்களும் பொதுமக்களும் குடும்பத்துடன் வந்து கண்காட்சியை கண்டு களித்தனா். கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் 3,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். இதுபோல், ரயில்வே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு ரயில் மாதிரிகளை குழந்தைகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க