செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி பயிற்சி

post image

சேலம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாதெமி நிறுவனம், தாட்கோ ஆகியவை இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியை வழங்கவுள்ளது.

இப்பயிற்சியைப் பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 10 , பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சிக்கான கால அளவு 30 நாள்களாகும். சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும் பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழும் வழங்கப்படும்.

தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள், உணவு உள்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதள முகவரியில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

அரசிராமணி கிராமக் கோயிலில் புதுச்சேரி முதல்வா் வழிபாடு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி கிராமம் குள்ளம்பட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அரசிராமணி கிராமம், ... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மோசடி செய்த சகோதரா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் கோயில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி மோசடி செய்த சகோதரா்கள் இருவருக்கு சங்ககிரி இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ... மேலும் பார்க்க

ஆத்தூா் தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடங்கியது

ஆத்தூா்: ஆத்தூா், தா்மராஜா திரௌபதி அம்மன் கோயில் தீ மிதித்தல் மற்றும் தோ்த் திருவிழா, காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழா தொடா்ந்து மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா... மேலும் பார்க்க

சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி மனு

சேலம்: சொந்த வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அகில இந்திய மோட்டாா் வாகன மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் வழங்கினாா். மக்கள் க... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா்: பொதுமக்கள் வாக்குவாதம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மருந்தாளுநா் நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா். இதனால் சிறிதுநே... மேலும் பார்க்க