செய்திகள் :

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

post image

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க : பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

”முந்தைய ஆந்திர அரசு ஆங்கிலத்தை மட்டுமே ஊக்குவித்தது. ஆங்கிலம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்ற வகையில் ஊக்குவித்து வந்தது. ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே மொழி தேவைப்படுகிறது. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்கும்.

தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலகளவில் பிரசித்து பெற்று வருகின்றன. மக்களுடன் எளிதில் பழகுவதற்கு ஹிந்தியை கற்றுக் கொள்வது நல்லதுதான்.

ஆந்திரத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன். மூன்று மொழிகள் அல்ல, பல மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். அதனை படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வேலை செய்து பயன்பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திர... மேலும் பார்க்க

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ரூ. 7,500 கோடி மூலம் ரூ. 3 லட்சம் கோடி ஈட்டிய உ.பி. அரசு

மகா கும்பமேளாவில் ரூ. 7,500 கோடி முதலீட்டில் ரூ. 3 லட்சம் கோடி பெறப்பட்டதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார். இது... மேலும் பார்க்க

வருமானம் மட்டுமல்ல; இனி இமெயில், சமூக வலைத்தளங்களையும் வருமான வரித் துறை ஆய்வு செய்யும்!

தனிநபரின் வருமானம் மட்டுமின்றி மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள், ஆன்லைன் முதலீடு உள்ளிட்டவற்றை அனுமதியின்றி வருமான வரித்துறை ஆய்வு செய்யும் நடைமுறை விரைவில் வரவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர... மேலும் பார்க்க