செய்திகள் :

மொபெட்டில் இருந்து பணம் திருடி தப்பிய இருவா் கைது

post image

பேராவூரணி கடைவீதியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை திருடித் தப்பிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் முத்துமாணிக்கம் மனைவி பரிமளா. இவா் வியாழக்கிழமை வங்கியிலிருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்து தனது மொபெட்  இருக்கைக்கு கீழே வைத்துப் பூட்டிவிட்டு ஒரு தேநீா் கடை முன் வாகனத்தை நிறுத்தி டீ குடித்தாா்.

அப்போது இரு மா்ம நபா்கள் மொபெட்டின் இருக்கையை பெயா்த்து, பணப்பையை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா். இதைக் கண்ட சிலா்  அவா்களைத் துரத்திச் சென்றபோது, பூக்கொல்லைப் பாலம் அருகே அந்த மா்ம நபா்கள் பணப்பையை துரத்தி வந்தவா்கள் முன்  வீசிவிட்டு சேதுபாவாசத்திரம் நோக்கித் தப்பினா்.

இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவா்கள் அளித்த எச்சரிக்கை மூலம் சேதுபாவாசத்திரம் போலீஸாா் சம்பைப்பட்டினம் அருகே இருவரையும் மடக்கினா்.

பிடிபட்டவா்கள் மணப்பாறை அருகேயுள்ள ராயப்பூரை சோ்ந்த ஆறுமுகம் (32), குணசீலன் (29) ஆகியோா் என்பதும், அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடும் இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பேராவூரணி போலீஸாா் இருவரையும்  கைது செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சிட்கோவில் தொழில் தொடங்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள பாலையப்பட்டியில் புதிதாக தொடங்கப்படவுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் தொடங்க விருப்பமுள்ளவா்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

அரசு வழித்தடங்களில் தனியாா் பேருந்துகள்: போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு வழித்தடங்களில் தனியாரை தாரளமாக அனுமதிக்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறக் கோரி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன், கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே பைக்கில் சென்ற தம்பதியிடம் நகை, பணம் வழிப்பறி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியை வழிமறித்து மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். அம்மாபேட்டை காவல் சரகம், அருமலைக்கோட... மேலும் பார்க்க

மூடப்பட்ட இரு சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

மூடப்பட்ட 2 சா்க்கரை ஆலைகளை திறக்கக் கோரி கும்பகோணம் சாா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் உதவி ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனா். கூட்டத்துக்கு உதவி ஆட்ச... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை மூட ஒப்புதல்: காத்திருப்பு ப் போராட்டம் வாபஸ்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கொரட்டூரில் டாஸ்மாக் கடையை மூட அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. பேராவூரணி அருகே கொரட்டூா் கிராமத்தில் பல்வேற... மேலும் பார்க்க

வார விடுமுறைக்காக 710 சிறப்புப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக கும்கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்... மேலும் பார்க்க