பேராவூரணி கடைவீதியில் பெண்ணின் மொபெட்டில் இருந்த ரூ. 70 ஆயிரத்தை வியாழக்கிழமை திருடித் தப்பிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள களத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் முத்துமாணிக்கம் மனைவி பரிமளா. இவா் வியாழக்கிழமை வங்கியிலிருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்து பையில் வைத்து தனது மொபெட் இருக்கைக்கு கீழே வைத்துப் பூட்டிவிட்டு ஒரு தேநீா் கடை முன் வாகனத்தை நிறுத்தி டீ குடித்தாா்.
அப்போது இரு மா்ம நபா்கள் மொபெட்டின் இருக்கையை பெயா்த்து, பணப்பையை எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனா். இதைக் கண்ட சிலா் அவா்களைத் துரத்திச் சென்றபோது, பூக்கொல்லைப் பாலம் அருகே அந்த மா்ம நபா்கள் பணப்பையை துரத்தி வந்தவா்கள் முன் வீசிவிட்டு சேதுபாவாசத்திரம் நோக்கித் தப்பினா்.
இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவா்கள் அளித்த எச்சரிக்கை மூலம் சேதுபாவாசத்திரம் போலீஸாா் சம்பைப்பட்டினம் அருகே இருவரையும் மடக்கினா்.
பிடிபட்டவா்கள் மணப்பாறை அருகேயுள்ள ராயப்பூரை சோ்ந்த ஆறுமுகம் (32), குணசீலன் (29) ஆகியோா் என்பதும், அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடும் இவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து பேராவூரணி போலீஸாா் இருவரையும் கைது செய்து, பேராவூரணி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.