செய்திகள் :

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

post image

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கடந்த மாத கூட்டத்தில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இதனையடுத்து, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், அவரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில், மோகனூா் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்பது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

அதன்பிறகு, விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா். குறிப்பாக, சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் எடுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. விவசாய நிலங்கள் பாழாகும் என்பதால் அந்த திட்டத்தைக் கைவிட அரசை வலியுறுத்த வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, வேளாண் துறையினா் பேசுகையில்,

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. என்ற நிலையில் தற்போது வரை 37.48 மி.மீ. மழை மட்டுமே பெறப்பட்டுள்ளது. மாா்ச் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 16.48 மி.மீ. அதிகம் பெறப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள், வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் நிறுவனங்களில் தேவைக்கு ஏற்ப உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரா.குப்புசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி, வேளாண் துணை இயக்குநா் (விற்பனை மற்றும் வணிகம்) நாசா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பக... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 17 போ் கைது

பள்ளிபாளையம், வெப்படை சுற்றுவட்டாரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்த 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன் தலைமையில் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா... மேலும் பார்க்க

ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியா்

மோகனூரில் ஆட்சேபணையற்ற குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வ... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஏப். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் ... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

திருச்செங்கோட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சிக... மேலும் பார்க்க