செய்திகள் :

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

post image

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அவர்களை பழிவாங்க மாட்டோம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுக் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆட்சியை மாற்றுவது, கட்சியை உடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு மாநிலக் கட்சிகளை பழிவாங்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அடியாட்களை ஏவி அச்சுறுத்துகிறார்கள். இதன் அச்சுறுத்தலால் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. அவ்வாறு சேரவில்லை என்றால் அவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை தொடர்கிறது.

ஹிமந்த பிஸ்வ சர்மா, சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் பற்றி தவறாகப் பேசியிருக்கிறார். அதானி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா?

தில்லி பாணியிலான நடவடிக்கை இங்கு நிறைவேறாது" என்றார்.

இதையும் படிக்க | உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே அதிமுக தீர்மானம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதையடுத்து மதுவிலக்கு குறித்து, "இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தைச் சுற்றிலும் எல்லா மாநிலங்களிலும் மது விற்கப்படுகிறது. எனவே இங்கே மட்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இங்குள்ளவர்கள் அருகிலுள்ள மாநிலங்களுக்கு சென்று மது குடிப்பார்கள் என்ற காரணத்தால்தான் மதுவிலக்கு இங்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக்கால் இறந்துபோகவில்லை என்று எந்த கிராமங்களிலும் சொல்லவில்லை. டாஸ்மாக்கால் இறந்துவிட்டார்கள் என எந்தக் கிராமத்திலிருந்து புகார் வந்துள்ளது? மது குடிப்பது கேடு என்றுதான் நாங்களும் சொல்கிறோம்.

தற்போது வரை 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. எஞ்சியுள்ள கடைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்" எனக் கூறினார்.

மேலும் "தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி விவகாரத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இதில் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனால்தான் தமிழக முதலமைச்சர் மீது பாஜகவிற்கு தனிக்கோபம்" என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதையும் படிக்க | அதிமுக தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - ஓபிஎஸ் விளக்கம்

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க