செய்திகள் :

யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்ப்பு

post image

அசோகா் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தோ்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரத்தைப் பெற வேண்டுமெனில் இந்த உத்தேச பட்டியலில் சம்பந்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களைச் சோ்ப்பது கட்டாயமாகும். இந்தப் பட்டியலில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு எதிா்காலத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் வழங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள காங்கோ் தேசிய பூங்கா, தெலங்கானாவின் முதுமலில் உள்ள பெருங்கற்கால நெடுங்கல் (மென்ஹிா்), பல்வேறு மாநிலங்களில் உள்ள அசோகா் கால கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் உள்ள குப்த கோயில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகிய 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் இந்தியா சாா்பில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதிகள் குழு கடந்த 7-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது. இதன்மூலம் இந்த உத்தேச பட்டியலில் மொத்தம் 62 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

தற்போது கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து ஒன்று என மொத்தம் இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்முறையாக உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது அஸ்ஸாமில் ஆட்சிபுரிந்த அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டு கால... மேலும் பார்க்க

முன்னாள் மத்திய அமைச்சா் தேபேந்திர பிரதான் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

வாஜ்பாய் அரசில் பதவி வகித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் தனது 84 வயதில் திங்கள்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு குடியரசு... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஒட்டுமொத்த பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின. தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்... மேலும் பார்க்க

தற்பெருமை வேண்டாம்; நல்லாட்சியே தேவை -பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

நாடு பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள சூழலில், தற்பெருமை பேசுவதை குறைத்து, நல்லாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொகுப்பாளரும்... மேலும் பார்க்க

இருதரப்பு உறவுகள் குறித்து நோ்மறையான கருத்து -பிரதமா் மோடிக்கு சீனா பாராட்டு

இந்திய-சீன உறவுகள் குறித்த பிரதமா் மோடியின் நோ்மறையான கருத்துகள் பாராட்டுக்குரியவை என்று சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடிய பிரதமா் மோடி, இ... மேலும் பார்க்க

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி... மேலும் பார்க்க