செய்திகள் :

யுனெஸ்கோ அங்கீகாரம்: உத்தேச பட்டியலில் 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்ப்பு

post image

அசோகா் கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள் உள்பட 6 இந்திய வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரம் வழங்குவதற்கு தோ்வு செய்யப்படும் உத்தேச பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன அங்கீகாரத்தைப் பெற வேண்டுமெனில் இந்த உத்தேச பட்டியலில் சம்பந்தப்பட்ட வரலாற்றுச் சின்னங்களைச் சோ்ப்பது கட்டாயமாகும். இந்தப் பட்டியலில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு எதிா்காலத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் வழங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் உள்ள காங்கோ் தேசிய பூங்கா, தெலங்கானாவின் முதுமலில் உள்ள பெருங்கற்கால நெடுங்கல் (மென்ஹிா்), பல்வேறு மாநிலங்களில் உள்ள அசோகா் கால கல்வெட்டுகள், சௌசத் யோகினி கோயில்கள், வடமாநிலங்களில் உள்ள குப்த கோயில்கள், மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள பண்டேலா கோட்டைகள் ஆகிய 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ உத்தேச பட்டியலில் இந்தியா சாா்பில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதிகள் குழு கடந்த 7-ஆம் தேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது. இதன்மூலம் இந்த உத்தேச பட்டியலில் மொத்தம் 62 இந்திய வரலாற்றுச் சின்னங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

தற்போது கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து ஒன்று என மொத்தம் இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்முறையாக உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது அஸ்ஸாமில் ஆட்சிபுரிந்த அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்தியரான கொலம்பிய பல்கலைக்கழக மாணவியின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் இளநிலை படிப்பை அகமதாபாத் சிஇபிடி பல்கல... மேலும் பார்க்க

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்!

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது வெளியுறவு அமைச்சர் விஜிதா... மேலும் பார்க்க

பாப்கார்னை தொடர்ந்து அதிக வரி விதிப்பில் டோனட்கள்: காங்கிரஸ்

பாப்கார்னுக்கு அடுத்தப்படியாக டோனட்கள் அதிக வரி விதிப்புக்குள்ளாகியிருப்பதாக காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ராமேஷ் எக்ஸ் தளத்தில்..சிங்கப்பூரைத் தளமாகக... மேலும் பார்க்க

என்ன, ஏடிஎம் கார்டு இருந்தாலே.. காப்பீடாக ரூ.2 லட்சம் கிடைக்குமா?

ஒருவர் வைத்திருக்கும் வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் கார்டுக்கே ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்பது சிலருக்குத் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவலாக இருக்கிறது.தனது பெயரில் உள்ள வங்கிக் கணக்... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது பு... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷாா் காந்தி மறுத்துவிட்ட நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத... மேலும் பார்க்க