செய்திகள் :

ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகள்! மக்கள் பீதி!

post image

அகமதாபாத் ரத யாத்திரையில் தறிகெட்டு ஓடிய கோயில் யானைகளால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பீதியடைந்தனர்.

புகழ்பெற்ற ஜெகந்நாதரின் ரத யாத்திரை ஒடிசாவின் புரி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களிலும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் 148-ஆம் ஆண்டு ஜெகந்நாதரில் ரத யாத்திரையில் அம்மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல் விழாவில் கலந்து கொண்டு தலைமை வகித்தார். அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் ரத யாத்திரை பங்கேற்பதற்காக குவிந்தனர்.

ஜமால்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் மங்கல ஆரத்தியுடன் விழா தொடங்கியது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும், அங்கிருந்த துறவிகள் மற்றும் ஞானிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

காதியா பகுதியில் ரத யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலமும் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த இளைஞர் அதீத சப்தம் மற்றும் விசில் ஒலி எழுப்பியதால், திடீரென ஒரு யானை மிரண்டு அங்கிருந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி ஓடியது. இந்த விடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனைக்கண்டு அங்கு குழுமியிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதோடு மேலும், 2 யானைகளும் ஓடின. யானைகள் தாக்கியதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 18 யானைகளில், தறிகெட்டு ஓடிய மூன்று யானைகள் பாகன்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

22 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் இந்த தேர் யாத்திரை இரவு முடிவடையும் என்பதால், அசம்பாவிதங்களைத் தடுக்க காவல் துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரித்வார், அயோத்தி, நாசிக், உஜ்ஜைன், ஜகந்நாதபுரி மற்றும் சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த 2,500 துறவிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

Chaos broke out during the Jagannath Rath Yatra in Ahmedabad on Thursday after a group of elephants accompanying the procession went out of control and trampled several people.

இதையும் படிக்க... புரி ஜெகந்நாதர் கோயிலில் ரத யாத்திரை கோலாகலம்!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 13 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரண்டைந்துள்ளனர். பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்த... மேலும் பார்க்க

இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் உரையாடியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ச்சியுடன், இன்று (ஜூன் 27) மதியம் செல்... மேலும் பார்க்க

கலப்பட எரிபொருள்: நடுவழியில் நின்ற ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள்

'கலப்பட' எரிபொருள் காரணமாக ம.பி. முதல்வரின் 19 பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நின்றதால் பரபரப்பு நிலவியது.மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் பாதுகாப்பு வாகனங்களில் 19 வாகனங்கள் கலப்பட பெட்ரோல் மற... மேலும் பார்க்க

கோவா: சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர் நாடுகடத்தல்!

கோவா மாநில காவல் துறையினர் மேற்கொண்ட ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம், இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்த 79 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ”ஆபரேஷன் ஃபிளஷ் அவுட்” நடவடிக்கையின் மூலம் ... மேலும் பார்க்க

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் விபரீதம்!

ஹைதராபாதில் மகள்களின் கல்விச் செலவுக்காக ஆபாசப் படத்தில் நடித்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் ஆம்பர்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து மொபைல் செய... மேலும் பார்க்க

ஹிமாசலில் திடீர் வெள்ளம்: இதுவரை 5 சடலங்கள் மீட்பு

ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இ... மேலும் பார்க்க