செய்திகள் :

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகளை தாக்க திட்டம்: உஷாா்நிலையில் பாதுகாப்புப் படைகள்

post image

ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீா் பண்டிட்டுகள், வெளிமாநில தொழிலாளா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதால், பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா்.

இந்நிலையில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் நாள்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காஷ்மீரில் உள்ள வெளிமாநில தொழிலாளா்கள், பாதுகாப்புப் படை வீரா்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறையிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள பல ரயில்வே பணியாளா்கள் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால், பயங்கரவாதத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக ரயில்வே உள்கட்டமைப்புகள் உள்ளன.

தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க பொது இடங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், தங்கள் நடமாட்டத்தை குறைத்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீநகா் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் காஷ்மீா் பண்டிட்டுகள், காவல் துறையினா் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தொடா்ந்து பாதுகாப்புப் படைகள் மிகுந்த உஷாா்நிலையில் உள்ளன. ரயில்வே உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தும் பயங்கரவாதிகளின் எந்தவொரு முயற்சியையும் தடுக்க, உள்ளுா் காவல் துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை பலவீனம்: கேரள அரசு பிரமாணப் பத்திரம்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பான வழக்கில், அணை பலவீனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசின் மனுவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தா... மேலும் பார்க்க

பஹல்காம்: முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் வீரர்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஹாஷிம் மூசா என்பவர் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் சிறப்புப் படை வீரராக இருந்தவர் என்று இந்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாளை(ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் நாளை(ஏப். 30) நடைபெற உள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்... மேலும் பார்க்க

உளவுத் துறை எச்சரிக்கை: ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவு!

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கக் கூட... மேலும் பார்க்க