செய்திகள் :

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

post image

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர்,

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுகளை நிராகரித்த அவர் ராகுல் காந்தி நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே நாட்டில் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

முன்னதாக, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஜெனரல் இசட் அரசியலமைப்பைக் காப்பாற்றுவார்கள், ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள், வாக்குத் திருட்டை நிறுத்துவார்கள் என்று வியாழக்கிழமை ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் ராகுல் காந்தி என்ன சொல்கிறார்? நாட்டில் வன்முறையை ஊக்குவிக்க முயற்சிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள் மீது ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் பொய்யான தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தை அவர் குறைத்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுலின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இந்திய ஜனநாயகத்தின் மீது காங்கிரஸின் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கின்றது. வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்திப்பார்கள் என்று பிரசாத் கூறினார்.

Senior BJP leader Ravi Shankar Prasad on Friday accused Congress' Rahul Gandhi of "systematically and deliberately trying to weaken democracy in the country" over his 'vote chori' (vote theft) allegations against the Election Commission.

5 பிஎச்கே! செபி தலைவருக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் வீடு ஏற்பாடு!

செபி தலைவர் துஹின் காந்த பாண்டேவுக்கு ரூ. 7 லட்சம் வாடகையில் சொகுசு குடியிருப்பை செபி ஏற்பாடு செய்துள்ளது.மார்ச் மாதத்தில் செபி தலைவராகப் பதவியேற்ற துஹுன் காந்த பாண்டேவுக்கு சொகுசு குடியிருப்பை செபி ஏ... மேலும் பார்க்க

மேலும் 474 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத மேலும் 474 அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது. ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவுசெய்யப்பட்ட கட்... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மேலும் 5 உடல்கள் மீட்பு: பலி 7ஆக உயர்வு

உத்தரகண்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் புதைந்த மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகண்ட் மாநிலம், கடந்த சில மாதங்களாக மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்புகளால் அவ்வப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க