செய்திகள் :

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மோரீஷஸ் பிரதமர் அஞ்சலி!

post image

தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மோரீஷஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அஞ்சலி செலுத்தினார்.

8 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த செப். 9-ம் தேதி ராம்கூலம் இந்தியா வந்தாா். பிரதமா் நரேந்திர மோடியை வாரணாசியில் சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினார். அப்போது வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஷ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு செய்தார். பிரதமர் ராம்கூலத்தின் இந்தியப் பயணத்தின் இறுதிக் கட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தலைநகரில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, ராஜ்காட்டில் உள்ள பார்வையாளர் புத்தகத்திலும் ராம்கூலம் கையெழுத்திட்டார்.

ராம்கூலம் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பார்வையிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தேசிய தலைநகரில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடிக்க உள்ளார்.

மோரீஷஸ் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை புது தில்லி வந்தடைந்தார், அங்கு அவரை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் வரவேற்றார்.

தலைநகருக்கு வருகை தருவதற்கு முன்பு, ராம்கூலம் திருப்பதியில் உள்ள திருமலை கோயிலுக்குச் சென்றார். முன்னதாக, அவர் பிரம்மரிஷி ஆசிரமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prime Minister of Mauritius Navin Ramgoolam on Tuesday paid homage to Mahatma Gandhi at Rajghat in the national capital, as part aof the concluding leg of his eight-day bilateral visit to India.

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

சத்தீஸ்கரில், ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் ஒருவர், பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.16) சரணடைந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் கடந்த 2005 ... மேலும் பார்க்க

பிரதமரின் பிறந்தநாளில் 75 லட்சம் மரக்கன்றுகள் நட ஒடிசா அரசுத் திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 லட்சம் மரக்கன்றுகளை நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் தேர்தல் முறையில் செயல்படுத்தப்படும் என வனத்துற... மேலும் பார்க்க

கேரள தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள அரசின் தலைமைச் செயலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

பிகாரில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.முன்னதாக, மாணவ விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்... மேலும் பார்க்க

ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு..! முதல் 15 நிமிட முன்பதிவு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே!

ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் அனுமதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சக... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா். மும்பை மற்றும் அதன் ... மேலும் பார்க்க