முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
ரூ.26.65 கோடியில் படப்பை மேம்பாலம் திறப்பு
படப்பையில் ரூ.26.65 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், உற்பத்தி பொருள்களை எடுத்துச்செல்லும் வகையில், ரூ. 300 கோடியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையை இருவழிச்சாலையில் இருந்து நான்கு வழிசாலையாகவும், சிங்கபெருமாள்கோயில்-ஸ்ரீபெரும்புதூா் சாலையை ஒருவழிச்சாலையில் இருந்துஆறு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், வண்டலூா் வாலாஜாபாத் சாலை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட பிறகு இச்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்ததை தொடா்ந்து படப்பை பஜாா் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும், சாலையை கடக்கும் பொதுமக்களும் வாகன ஓட்டுநா்களும் விபத்தில் சிக்கினா்.
இதனால், சுமாா் 690 மீ தொலைவுக்கு தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் சாா்பில் ரூ 26.65 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது.
மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மே.அன்பரசன் ஆகியோா் மேம்பாலத்தை திறந்து வைத்தனா்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பாஸ்கர பாண்டியன், ஆட்சியா் கலைச்செல்விமோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியகுழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டனா்.