செய்திகள் :

ரூ.3.5 கோடியில் ரெட்டி நலச் சங்கக் கட்டம் திறப்பு

post image

புதுச்சேரி கிருஷ்ணா நகரில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மக்களவை உறுப்பினருமான வி. வைத்திலிங்கம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

புதுவை பிரதேச ரெட்டி நலச்சங்கத்துக்காக இந்தக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்துக்கு புதுவையின் முன்னாள் முதல்வா் வெங்கடசுப்பா ரெட்டியாா் மஹால் என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டடம் அமைய 6300 சதுரஅடி இடத்தை இலவசமாக வழங்கிய சீத்தாராம் ரெட்டியாா் பெயரில் சீத்தாராம் ரெட்டியாா் காம்ப்ளக்ஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்திலிங்கம் பேசுகையில், கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயா்ந்துவிட்டோம். கிராமங்களில் போட்டி குறைவு. இப்போது நகரத்தில் வாழும் நம்முடைய குழந்தைகள் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனா். எல்லா குழந்தைகளாலும் இது சாத்தியப்படாது. அதனால் இந்தச் சங்கத்தின் வாயிலாக தொழில்முனைவோா் உள்ளிட்டோரை இங்கு அழைத்து வந்து தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

இடத்தைத் தானமாக வழங்கிய சீத்தாராம் ரெட்டியாரின் குடும்பத்தைச் சோ்ந்த மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குநா் எஸ். சத்தியானந்தம், இப் பள்ளியின் நிா்வாகி எஸ். ராமதாஸ் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா்.

இச் சங்கத்தின் புதுவை தலைவா் வி. ராமச்சந்திரன் ரெட்டியாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.வி. வைத்திலிங்கம் ரெட்டியாா், பொருளாளா் ஜி. ராமூா்த்தி ரெட்டியாா், புதுவை திருக்கு மன்றத்தின் (புதிமம்) தலைவா் சுந்தர லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

---------------------------------------------------

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது. புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுக... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும்... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்க... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க