செய்திகள் :

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

post image

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை  சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்படும் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 4) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots SE) நிறுவனம், ரூ. 300கோடி முதலீட்டில்காஞ்சிபுரம்மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை  சிப்காட்தொழிற்பூங்காவில்அமைத்துள்ளசெயற்கைநுண்ணறிவுசார்ந்தரோபோட்டிக்இயந்திரபாகங்கள்உற்பத்திஆலையைகாணொலிக்காட்சிவாயிலாகதிறந்து வைத்து,  பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6  மாணவர்களுக்கு  உள்ளகப்பயிற்சி (Internship) அளிப்பதற்கான கடிதங்களை வழங்கினார். 

மேலும், இராணிப்பேட்டை சிப்காட்டில் SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,  ரூ. 175 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலையையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  

தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது.  

முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, 2024-25 ஆம் ஆண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.  இது, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். 

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் பொருளாதாரம்
1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.  

அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் SE நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும்  நிறுவனம் ஆகும்.   இந்நிறுவனம், தற்போது,  அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது.  இத்திட்டத்தில், ரூ. 300 கோடி முதலீட்டில்  300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காற்று பிரித்தெடுக்கும் ஆலை

SOL இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த SOL SpA மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும்.  ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, ரூ.100 கோடி முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ. 200 கோடி முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.  

இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலை அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினால் கடந்த 19.07.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து, ரூ. 175 கோடி முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும்.  20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இவ்விரு ஆலைகளும் முதல்வர் ஸ்டாலினால் இன்றைய நாள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து  வைக்கப்பட்டது.   

இதையும் படிக்க: ரசிகர்களைக் கவரும் சின்ன மருமகள் தொடர்!

பக்ரீத் திருநாள்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பக்ரீத் திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், அனைவருக்கு... மேலும் பார்க்க

அமித் ஷா நாளை மதுரை வருகை!

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை வருகை தரவுள்ளார்.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய பணிகளை கட்சிகள் தொடங்கிய... மேலும் பார்க்க

திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி பலி!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அனுமதியின்றி வீட்டின் அருகே தோண்டிய கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிருக்குப் போராடிய அவ... மேலும் பார்க்க

பக்ரீத் திருநாள்: நாமக்கலில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

நாமக்கல்: இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கருதப்படும் பக்ரீத் பண்டிகை நாமக்கலில் சனிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி, நாமக்கல் பேட்டை அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சார்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: சிவகங்கையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

சிவகங்கை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சனிக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.பக்ரீத் பண்டிகை, உலகமெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்ட... மேலும் பார்க்க

லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாமக்கல்: நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்புப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கினார்.நாமக்கல் அ... மேலும் பார்க்க