செய்திகள் :

லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

post image

நாமக்கல்: நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்புப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கினார்.

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி கார்களில் உள்ள இரும்புகளை சேகரித்து அதனைத் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார்.

தீ விபத்து

இந்த நிலையில் அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய லாரிகளின் உதிரி பாகங்கள் திடீரென எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த வழியாக சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் பரமத்தி வேலூருக்கு காரில் பயணம் மேற்கொண்டார்.

நாமக்கல் தீ விபத்து

அப்போது அந்தப் பழைய இரும்பு கடையின் முன்பு இருந்த பழைய வாகனத்தின் உதிரி பாகங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரிடம் தீ எவ்வாறு பற்றியது என்று கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதால் தீயை உடனடியாக அணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பழைய வாகனங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து

சட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் பச்சமலை தோனூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் பரத், பொது சட்ட... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2001-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்

தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என டிடிவி தினகரன் கூறியுள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என்று நினைப்பவர்கள் தே... மேலும் பார்க்க

ஜூன் 10 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் ஜூன் 10 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 7, 8, 9 வரை தமிழகத்தில் ... மேலும் பார்க்க

அன்புமணியைச் சந்திக்கும் திட்டமில்லை: சென்னையில் ராமதாஸ் பேட்டி

பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், "மருத்துவப் பரிசோதனைக்காகவே சென்னை வந்துள்ளேன். ப... மேலும் பார்க்க

தஞ்சை: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) காலமானார். 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.தஞ்சாவூர் மாவட்டம... மேலும் பார்க்க