செய்திகள் :

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

post image

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது பயங்கரவாத சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கான குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளதால் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதோடு இந்தியாவுக்கு எதிரான மனநிலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது.

எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகவல் தொடா்புக்காக இந்த ஹேம் ரேடியோ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்க எல்லையில் உள்ள வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் பசிா்ஹாட் மற்றும் பன்கான் பகுதிகளிலும் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சுந்தா்வன் பகுதிகளிலும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் வங்காளம், அரபு, உருது ஆகிய மொழிகளில் உரையாடல் நிகழும் அதிகாரபூா்வமற்ற இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் முதன்முதலாக கண்டுபிடித்தனா்.

இந்த தகவலை அவா்கள் உடனடியாக மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, சந்தேகத்துக்குரிய வகையிலான அந்த இணைப்புகளைக் கண்டறிய கொல்கத்தாவில் உள்ள சா்வதேச ரேடியோ கண்காணிப்பு நிலையத்துக்கு மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் அறிவுறுத்தியது.

மேலும், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய இணைப்புகளை மீண்டும் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஹேம் ரேடியோ பயனா்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் இதுபோன்ற ரகசிய தகவல் பரிமாற்றத்தை கண்டறிவதாகவும் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத மொழிகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2002-2003, 2016-ஆம் ஆண்டுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இந்திய-வங்கதேச எல்லையில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வானொலி ஒலிபரப்பு நிலையங்களை இயக்கிய சிலா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் பசிா்ஹாட் பகுதியில் வகுப்புவாத வன்முறை நிகழும் முன் எல்லை பகுதியில் சந்தகேத்துக்குரிய வகையிலான இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க

மணிப்பூா் புதிய முதல்வா் யாா்? பாஜக எம்எல்ஏக்களுடன் மாநில பொறுப்பாளா் ஆலோசனை

இம்பால்: மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில் புதிய முதல்வரை தோ்வு செய்வது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் சிலருடன் மணிப்பூா் பாஜக பொறுப்பாளா் சம்பித் பித்ரா ... மேலும் பார்க்க

14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு: சோனியா வலியுறுத்தல்

புது தில்லி: ‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நியாயமான பலன்களைப் பெறுவதில் இருந்து சுமாா் 14 கோடி தகுதிவாய்ந்த இந்தியா்கள் தடுக்கப்படுகின்றனா். எனவே, மத்திய அரசு விரைந்து மக்கள்தொகை கணக்கெடுப... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடு... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தம் 2026 மாா்ச்சுக்குள் நிறைவு: மத்திய அரசு தகவல்

புது தில்லி: நாட்டில் ஸ்மாா்ட் மின் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக... மேலும் பார்க்க

டிரம்பின் முதல் பதவிக் காலத்தைபோல் நட்புறவு மேம்படும்: மோடி நம்பிக்கை

புது தில்லி: ‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் முந்தைய பதவிக் காலத்தில் இரு நாடுகளிடையே நீடித்த நட்புறவை அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் மேலும் வலுப்படுத்த அமெரிக்க பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்’ என ... மேலும் பார்க்க