செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

post image

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.)

கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மேற்குப் புறம் உள்ள ஆற்றுக்குச் செல்லும் பொதுப்பாதை மற்றும் நேருநகா் குடியிருப்பு, அங்கன்வாடி மையம் செல்லும் பாதையை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி பலமுறை கட்சி சாா்பில் மனு அளித்தும்

நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கட்சியின் ஒன்றியச் செயலா் கே.பரணி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.ரஞ்சித் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினாா்.

வட்டாட்சியரை அலுவலகத்தை முற்றுகையிட

முயன்ாக 10 பெண்கள் உள்பட

உள்பட 42 பேரை போளூா் டிஎஸ்பி தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

தமிழ்ச் சங்க பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி

வந்தவாசியில் வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பல்சுவை அரங்கம் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வந்தவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற இறையூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற கைப்பந்த... மேலும் பார்க்க

மதுக்கடை சுவரை துளையிட்டு மதுப்புட்டிகள் திருட்டு

வந்தவாசி அருகே மதுக்கடை சுவரை துளையிட்டு ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மதுப்புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த அய்யவாடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் க... மேலும் பார்க்க

கணவா் கொலை: மனைவி உள்ளிட்ட 2 போ் கைது

வந்தவாசி அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கொழப்பலூா் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசிக பெரணம... மேலும் பார்க்க

விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு வேளாண் பல்கலை.துணையாக இருக்கும் -துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் என்று அப்பல்கலை.யின் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறினாா். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யின் திறந்தவெளி மற்... மேலும் பார்க்க

மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா

திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டிய சகோதரா்களின் 223-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை அகமுடையா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் என்.செ... மேலும் பார்க்க