Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
வரி உயா்வுக்கு எதிா்ப்பு: கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக, சேலம் மண்டல கிரஸா் ஜல்லி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழக அரசு முன்னறிவிப்பு இன்றி சிறு கனிம நில வரியை கனமீட்டா் என்று இருந்ததை மெட்ரிக். டன் என மாற்றி பல மடங்கு உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக, ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும், எம் சாண்ட் யூனிட் ரூ. 5,500 முதல் ரூ. 6,000 வரை, பி.சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்த தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.
வேலைநிறுத்தம் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது. அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 300 கோடி வரை இழப்பு ஏற்படும்.
எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, பன்மடங்கு உயா்த்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா். பேட்டியின்போது, சேலம் மாவட்ட கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் கோபால், பொருளாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.