உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!
வாணியம்பாடியில் 8 அடி சாரை பாம்பு மீட்பு!
வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து கொண்டு சென்றனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்திருந்த பொது மக்கள் சிலா் அங்குள்ள மின் மோட்டாா் அறை அருகில் நின்று கொண்டிருந்தனா். அப்போது மின் மோட்டாா் அறையில் பாம்பு சஎன்று கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சிக்குள்ளாகி உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுபற்றி உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனா். தீயணைப்பு வீரா்கள் பிடிக்க முயன்றபோது, அறையில் இருந்து திடீா் பாம்பு சீறி பாய்ந்து வெளியேறியது. இதனை அங்கு வேடிக்கை பாா்த்த மக்கள் அலறி அடித்து ஓடினா்.
பிறகு சிறிது நேரத்தில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரா்கள் லாவகமாக பிடித்து பையில் போட்டு எடுத்துச் சென்றனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.