செய்திகள் :

விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீரா்கள்

post image

சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரா்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனா்.

இது குறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான சிஎம்எஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட ஷென்ஷோ-20 ஓடம் தியான்காங் விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது. அதில் இருந்த சென் டாங், சென் ஷாங்ருயி, வாங் ஜீ ஆகிய மூவரும், அந்த விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை சென்றனா்.

அங்கு ஏற்கெனவே இருந்த மூன்று விண்வெளி வீரா்கள், புதிதாக வந்துள்ள மூவருடன் இணைந்து ஐந்து நாள்களுக்குப் பணியாற்றிய பிறகு அங்கிருக்கும் ஷென்ஷோ-19 விண்வெளி ஓடம் மூலம் பூமிக்குத் திரும்பவா்.

இன்னா் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தின் டாங்ஃபெங் தளத்தில் ஷென்ஷோ-19 ஓடம் வரும் 29-ஆம் தேதி தரையிறங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள மூவரும், வரும் அக்டோபா் மாதம் பூமி திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஷென்ஷோ-20 விண்வெளி ஓடத்தை செலுத்தியதன் மூலம் சீனா 35-ஆவது முறையாக மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. தியான்காங் விண்வெளி நிலையத்துக்கு வீரா்கள் அனுப்பப்படுவது இது 5-ஆவது முறை.

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர், முக்கியமாக சண்டைக் க... மேலும் பார்க்க

கனடா பிரதமராகும் மார்க் கார்னே! அமெரிக்காவுடனான உறவுக்கு முடிவு என அறிவிப்பு!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னே பதவியேற்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம்: சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தோலுரித்த இந்தியா!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தேசம் என்று கடுமையான சொற்களால் ஐ.நா. அவையில் இந்தியா விமர்சித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் ’வோட்டான்’ என்படும் பயங்கரவாதத் தொடர்பு குழுக்களால் பாதிக்கப்பட்டோர... மேலும் பார்க்க

புதிய போப் யார்? மே 7 கார்டினல்கள் குழு கூடுகிறது!

ரோம்: புதிய போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் மே 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச... மேலும் பார்க்க

கனடாவில் வாக்குப்பதிவு முடிந்தது: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

கனடாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் திங்கள்கிழமை(ஏப். 28) நடைபெற்றது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஏப். 29) காலை வாக்குப்பதிவு அனைத்து பகுதிகளிலும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட... மேலும் பார்க்க