செய்திகள் :

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

post image

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா்.

திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா் திருப்பூரில் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளாா். அவா் கடந்த 18.4.2016 அன்று திருப்பூா் பல்லடம் சாலையில் தெற்கு பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட கூடுதல் சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் 20.9.2023-இல் தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், 12,52,400 ரூபாயை கருப்பையா குடும்பத்தாருக்கு அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி நந்தினி தீா்ப்பளித்தாா்.

ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்டவா் தரப்பில் 2024-இல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து விசாரித்த நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப்பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற... மேலும் பார்க்க

விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்... மேலும் பார்க்க

மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்

தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ட... மேலும் பார்க்க

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த ‘பட்ஜெட்‘!

திருச்சி, மாா்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா், அரசு ஊழியா்கள், ஆ... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் அருகே டி.நகரைச் சோ்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் மகா தா்ஷினி (22). இவா் விழாக்களில் ... மேலும் பார்க்க