செய்திகள் :

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமானது ‘மாதவ் புலிகள் காப்பகம்’ எனும் பெயரில் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் ’புலிகளின் மாநிலம்’ எனும் பெருமையை தக்கவைப்பதுடன் புதிய சாதனைகளை நோக்கி நகர்வதாக முதல்வர் மோகன் யாதவ் இன்று (மார்ச் 5) கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புலிகள் காப்பகத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் விடுதிகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் சுற்றுலாக் காலம் முழுவதும் மக்களால் நிறைந்திருப்பதாகவும்; இது மத்தியப் பிரதேசத்தின் மீதான சுற்றுலாப் பயணிகளின் அன்பையும், அம்மாநிலத்தின் காடுகளின் வளமையையும் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!

இந்நிலையில், புதிய மாதவ் புலிகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சம்பல் பகுதியில் மாநில அரசு ஒரு புதிய சுற்றுலாப் பகுதியை உருவாக்கும் என்றும் இதனால் அப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் யாதவ் கூறியதாவது: ஒருபுறம், ஆசியாவில் நமது சம்பல் பகுதியில் சிறுத்தைகள் மீண்டும் சுற்றித் திரிவதைக் காணலாம். மேலும், சம்பல் ஆற்றில் டால்பின் கரியல் திட்டத்திற்கான பணிகளும் அதேப் பகுதியில் நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், அந்தப் பகுதியில் கழுகுகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் அங்கு இரண்டு புலிகளை விடுவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி வெட்டிக் கொலை!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்... மேலும் பார்க்க

கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர... மேலும் பார்க்க