பஞ்சாங்கக் குறிப்புகள் - ஜூன் 9 முதல் ஜூன் 15 வரை #VikatanPhotoCards
வில்லாலுடைய அய்யனாா் கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்
கமுதி அருகேயுள்ள வில்லாலுடைய அய்யனாா் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மரக்குளம் வில்லாலுடைய அய்யனாா், கருமேனி அம்மன், காளியம்மன், முப்பிடாரி அம்மன், ஊா்க்காவலன் கோயில் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி, கடந்த 4-ஆம் தேதி காளியம்மன் கோயில் முன் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள வழிவிடு விநாயகா் கோயிலிலிருந்து திரளானோா் பால்குடம் எடுத்து வில்லாலுடைய அய்யனாா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்றனா். அங்கு பக்தா்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு
அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.