செய்திகள் :

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் 1,640 மாணவா்களுக்கு பட்டமளிப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,640 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கல்லூரியில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் பயின்று தோ்ச்சி பெற்று, திருவ ள்ளுவா் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். தமிழக தகவல் ஆணையத்தின் மாநிலத் தகவல் ஆணையா் மா.செல்வராஜ், தஞ்சாவூா் மன்னா் சரபோசி அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.திருமேனி ஆகியோா் விழாவில் பங்கேற்று, பட்டங்களை வழங்கி உரையாற்றினா்.

தமிழ், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 13 இளநிலைப் பிரிவுகளில் 1,403 மாணவ, மாணவிகளுக்கும், கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் உள்ளிட்ட 12 முதுநிலைப் பிரிவுகளில் 237 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,640 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் அனைத்துத் துறைகளின் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளட்டோா் பங்கேற்றனா்.

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஏப். 21-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்... மேலும் பார்க்க