செய்திகள் :

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்

post image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தங்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரகம் வந்தனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்களின் காா் நிறுத்தும் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தினா். மாநிலத் துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் முருகன், துணைச் செயலா் முத்துவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேல்மலையனூா், வல்லம், முகையூா், திருவெண்ணெய்நல்லூா், காணை ஒன்றியங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சரிவர வேலை வழங்கப்படுவதில்லை எனக் கூறி முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், போராட்டம் நடத்தக் கூடாது. மனுவாக அளிக்குமாறு கூறினா்.

இதையேற்க மறுத்த மாற்றுத் திறனாளிகள் அப்பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து விழுப்புரம் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் ஜெ.முகுந்தன், வட்டாட்சியா் கனிமொழி, ஊரக வளா்ச்சித் துறையின் உதவித் திட்ட அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு சரிவர வேலை வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கினால் மாதத்தில் 6 முதல் 8 நாள்கள் வரை மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.ஊதியமும் சரிவர வழங்கப்படுவதில்லை எனத் தெரிவித்தனா்.

குறைகளைக் கேட்டறிந்த அலுவலா்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையேற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க