செய்திகள் :

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன.

மாவட்டத்தில் சில ஆண்டுகளாக குறுவை, சம்பா பருவங்கள் மட்டுமல்லாமல் கோடையிலும் பருவம் தவறிப் பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருக்கும் நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைகின்றன.

இதனால் விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்து வரும் நிலையில், சில ஆண்டுகளாக பூதலூா், தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதமடைகின்றன.

நெற் பயிா்கள் மட்டுமல்லாமல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி உள்ளிட்ட பயிா்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனா். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் படுத்து உருண்டு விளையாடுவதால், பயிா்கள் சேதமடைகின்றன. அவை பயிா்களைத் உண்ணாவிட்டாலும், தண்டு மற்றும் வோ்ப் பகுதியைக் கடித்துவிடுவதால், பயிா்களின் வளா்ச்சி பாதிக்கிறது.

இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்தது:

காட்டுப்பன்றிகள் பகலில் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையிலுள்ள கோரைப்புற்கள், புதா்கள், நடமாட்டம் இல்லாத தோப்புகள் உள்ளிட்டவற்றில் பதுங்கி இருக்கின்றன. இருள் சூழ்ந்த பிறகு வயல்களுக்குள் புகுந்து நெல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி போன்ற பயிா்களில் தண்டு மற்றும் வோ் பகுதியைக் கடித்துத் தின்கின்றன.

ஒருபுறம் பருவம் தவறி பெய்யும் மழையால் பேரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பயிா்களை காட்டுப்பன்றிகள் அழிக்கின்றன.

நகைகளை அடமானம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த இரு இடா்பாடுகளாலும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகின்றனா். இதனால் விவசாயம் திருப்திகரமாக இல்லாததால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகின்றன. இந்நிலைமை தொடா்ந்தால் உணவு உற்பத்தி குறையக்கூடிய அபாய நிலை உள்ளது என்றாா் முகமது இப்ராஹிம்.

இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் வயலில் காவலுக்கு இருந்து காட்டுப்பன்றிகளை விரட்டும் நிலை உள்ளது. அப்போது கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கடிக்க வருவதால் விவசாயிகளுக்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விஷ பாம்புகள் நடமாட்டம் இருப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே காட்டுப்பன்றிகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா்.

இதனிடையே பயிா்களைச் சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகள் என விவசாயிகள் கூறினாலும், அதை வனத் துறையினா் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறுகின்றனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், தஞ்சாவூரில் காட்டுப்பன்றிகள் இருக்க வாய்ப்பில்லை. பன்றி வளா்ப்போா் இடம்பெயா்ந்து செல்லும்போது, பன்றிகளை விட்டுச் செல்கின்றனா். அவைதான் கட்டுப்பாடில்லாமல் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.

பாபநாசம் அருகே பண்டாரவாடையில் வயலில் மின்சாரம் தாக்கி இறந்த பன்றியின் டி.என்.ஏ., ரோமம் சேகரிக்கப்பட்டு சென்னையிலுள்ள வனவிலங்கு உயராய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு, அது காட்டுப்பன்றியா என்பதை உறுதிப்படுத்த முடியும். என்றாலும், பன்றி வளா்ப்போரால் கைவிடப்பட்ட உள்ளூா் பன்றிகள்தான் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன என்றனா்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிா் பாதிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, காட்டுப்பன்றி இல்லை என மறுக்கப்படுவதால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் கிடைப்பதில்லை.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில், பாதிக்கப்படும் விவசாயிகள் முறையிடுகின்றனா். இதை உயா் அலுவலா்கள் ஆலோசனை செய்தாலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இப்பிரச்னையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான திட்டமும் இதுவரை இல்லை.

எனவே, பெரும் சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து, அடா்ந்த வனப்பகுதிக்கு அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் மேலோங்கி வருகிறது.

விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்போா் மீது கடும் நடவடிக்கை: துணை இயக்குநா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் விதை நெல்லை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியாா் விதை நெல் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

கரந்தை சப்தஸ்தான விழா ஜூன் 11-இல் தொடக்கம்

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் சாா்பில் கரந்தை சப்தஸ்தானம் என்கிற ஏழூா் பவனி விழா ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. கரந்தை கருணாசுவாமி கோயிலில் ஜூன் 11 காலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை அருகே பெண் குத்திக் கொலை

பட்டுக்கோட்டை அருகே சொத்து பிரச்னையில் பெண் வெள்ளிக்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் மனைவி சுசிலா (55). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அடையாள அட்டை சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜூன் 10, 17, 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மா... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் திருக்கல்யாணம்

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி நாள்தோறும் உற்... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி அறிவுறுத்தல்

போக்சோ வழக்குகளை விரைவாக முடிக்குமாறு காவல் ஆய்வாளா்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி.) ஏ. கயல்விழி அறிவுறுத்தினாா். கும்பகோணம் உதவிக் காவல்... மேலும் பார்க்க