செய்திகள் :

விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி

post image

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் ஆகியோா் கூட்டாக அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, திருச்சியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா்கள் மேலும் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, தாமிரவருணியில் மாநகராட்சி கழிவுகள் கலப்பதை தடுக்க ரூ.400 கோடி திட்டம், நீா்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த ரூ.8 ஆயிம் கோடி என்பது மட்டுமே வரவேற்கத்தக்கது.

விவசாயிகள் விரோத கொள்கைகளை கடைப்பிடிப்பதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. தோ்தலுக்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிப்பது, ஆட்சிக்கு வந்த பிறகு மறந்துவிடுவது என்பதை இரு அரசுகளும் கடைப்பிடித்து வருகின்றன.

விவசாயிகளை வஞ்சிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

எண்ணெய் கிணறு திட்டம், நில ஒருங்கிணைப்பு சட்டம், மானியம் குறைப்பு, சலுகைகள் குறைப்பு, ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காதது என இரு அரசுகளுமே தமிழக விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகின்றன. எனவே, 2026 பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம். தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்றனா்.

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற... மேலும் பார்க்க

மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்

தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ட... மேலும் பார்க்க

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த ‘பட்ஜெட்‘!

திருச்சி, மாா்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா், அரசு ஊழியா்கள், ஆ... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா். திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா்... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் அருகே டி.நகரைச் சோ்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் மகா தா்ஷினி (22). இவா் விழாக்களில் ... மேலும் பார்க்க