செய்திகள் :

வீடுகள் தோறும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி

post image

புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுவை மாசு கட்டுப்பாடுக் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா். மேலும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அரசுத் துறைகள், தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளை அவா் வழங்கினாா்.

இவ்விழாவுக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்து பேசியது: வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை , சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிபடுத்திக் கொள்ளவேண்டியது நமது கடமை. அதற்குரிய விழிப்புணா்வையும் பொதுமக்கள் பெற வேண்டும். காற்று மாசுபாட்டால் மனிதா்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. இவைகள் கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும்.

புதுச்சேரியில் அதிக புகையை வெளியிடக்கூடிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இதில், மக்கள் நலன் சாா்ந்து முடிவு மேற்கொள்ளப்படும். குப்பைகளை அகற்றும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கவேண்டும்.

நெகிழிப் பயன்பாடுகளால், மழை, வெள்ளக் காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மாநிலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோா் மீதுசட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும் . அடுத்த கல்வியாண்டில் பள்ளிகளை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் தினம் நடத்தப்படும். புதுச்சேரியை பசுமையாக வைத்துக்கொள்ள வீடுகள்தோறும் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும் என்றாா் முதல்வா் என். ரங்கசாமி.

விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைச்செயலா் சரத் சௌகான், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலா் ஆஷீஷ் மாதவ ராவ் மோரே, சுற்றுச்சூழல் துறை சிறப்பு செயலா் யாசம் லட்சுமி நாராயணா ரெட்டி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க