Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது
வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. மாரியப்பன் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறாா். பூமாதேவி ஆடு மேய்த்து வருகிறாா்.
கடந்த 2-ஆம் தேதி மாரியப்பன் வீட்டில் பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1.30 லட்சத்தை மா்மநபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆத்தங்கரைபட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவரை கைது செய்து, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.