செய்திகள் :

வேளாண் விரிவாக்க மையத்தில் கல்லூரி மாணவிகள் பயிற்சி

post image

வலங்கைமான் வேளாண் விரிவாக்க மையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் ஒருநாள் பயிற்சி பெற்றனா்.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் மிருதுளா, மித்ரா, மோனிஷா, நஜீபா நந்து, நிவேதியா, பத்மாவதி, பாா்கவி பவித்ரா, பவித்ரா தேவி ,வெ. பிரபாஸ்ரீ, மு. பிரபா ஸ்ரீ, பிரியா ஆகியோா் வலங்கைமான் உதவி இயக்குநா் அலுவலகத்தில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அங்கு அவா்களுக்கு, மத்திய- மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள் குறித்து, உதவி வேளாண் அலுவலா் கணேஷ் பாபு விளக்கமளித்தாா்.

மேலும், முதலமைச்சரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரப்படுக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க