செய்திகள் :

ஷிகான் ஹுசைனியைப் பாதித்த ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது?

post image

கராத்தே கலையில் புகழ்பெற்ற ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

கராத்தே கலையில் பெயர் பெற்றவரும் வில் வித்தையிலும் தேர்ச்சி பெற்று, உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை படைத்தவர் ஷிகான் ஹுசைனி.

திரைப்பட நடிகரும் கூட. தமிழ் நாடு 'வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர். பல்வேறு பொறுப்புகளை ஏற்று, நாட்டில் கராத்தே கலையை பல்வேறு தரப்பினருக்கும் பரப்பி வருகிறார்.

இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா, ரத்தப் புற்றுநோயாக மாறி இவரது வாழ்நாள் எண்ணப்பட்டு வருவதாக சில ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணல் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.

இவர் தமிழக துணை முதல்வர் உள்ளிட்டவர்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான், இவருக்கு ஏற்பட்ட ஏபிளாஸ்டிக் அனீமியா பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நோய்க்கு ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது.

போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப் பகுதியே எலும்பு மஞ்ஜை. இதுதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுக்களை உற்பத்தி செய்யும்.

ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் சேதங்களால் ஏபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது. ஸ்டெம் செல்கள் என்பது எலும்பு மஞ்ஜையில் உள்ள முதிர்ச்சியடையாத செல்கள் ஆகும், அவை அனைத்து இரத்த அணு வகைகளையும் அதாவது சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகளையும் உருவாக்குகின்றன. ஆனால், ஸ்டெம் செல்களில் ஏற்படும் காயம் இந்த இரத்த அணு வகைகளின் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிறது.

இவை ஏற்படக் காரணங்கள்..

சில மருந்துகள், சில வேதிப்பொருள்களின் பயன்பாடு.

அணுக்கதிர் வீச்சுகள், கீமோதெரபி

நோயெதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு

கருவுற்றிருப்போருக்கு

சில நுண்ணுயிரி தொற்றுகள் காரணமாகின்றன. ஆனால், சில வேளைகளில் இதற்கு எந்த அடிப்படைக் காரணமும் கண்டறியப்படுவதில்லை. இந்த நேரங்களில் இதனை இடியோபாதிக் ஏபிளாஸ்டிக் அனீமியா என்கிறார்கள்.

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க