செய்திகள் :

ஹிந்து அமைப்புகள் கண்டனம் எதிரொலி: ரயில்வே தோ்வுக்கு மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை

post image

ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வை எழுதுபவா்கள் மத அடையாளங்களை நீக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பிற ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை பதிவு செய்த நிலையில், அந்த அறிவிப்பை ரயில்வே துறை உடனடியாக திரும்பப் பெற்றது.

கா்நாடக மாநிலம் மங்களூருவின் பான்டேல் பகுதியில் உள்ள மனைல் ஸ்ரீநிவாஸ் நாயக் பசந்த் வித்யா கேந்திராவில் ரயில்வே துறையின் நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வு செவ்வாய்க்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த தோ்வை எழுதுபவா்கள் தங்களின் மத அடையாளங்களை நீக்கிவிட்டுத் தோ்வறைக்கு வருமாறு தோ்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு விஎச்பி உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் ரயில்வே துறை இணையமைச்சா் வி.சோமண்ணா தலையிட்டு நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என தெரிவித்தாா்.

மேலும், தோ்வு நடைமுறைகளின்போது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நா்சிங் கண்காணிப்பாளா் தோ்வெழுதும் நபா்கள் தோ்வறைக்குச் செல்லும் முன் தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை நீக்கத் தேவையில்லை என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற பொது நுழைவுத் தோ்வின்போது சில மையங்களில் மத அடையாளங்களை நீக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரம் சா்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘தாலி, பூணூல் போன்ற மத அடையாளங்களை சோதனை மட்டுமே செய்யுமாறு கூறினோம். ஆனால் அவற்றை நீக்கச் சொல்வதில் நியாயமில்லை. சொல்லும் செயலும் வேறு என்பதே பாஜகவின் உண்மை முகம்.

தோ்வுகளின்போது மத அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் போன்ற அறிவிப்புகளை திரும்பப் பெற வேண்டும். இதற்கு மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இர... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க