செய்திகள் :

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

post image

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் கூடத்துக்கும் சீல் வைத்தனர்.

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஏராளமான மதுபானக் கூடங்களும், மசாஜ் சென்டர்களும் இயங்கி வருகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்களை இந்த மதுபானக் கூடங்களும், மசாஜ் சென்டர்களும் பணியில் அமர்த்தியுள்ளன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒர் தனியார மதுபானக் கூடத்தில் ஆபாச நடனத்துடன் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலறிந்த காவல் உதவி ஆணையர் வெங்கட் ரமணா தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட மதுபானக் கூடத்தில் அதிரடியாக நுழைந்து, ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மதுபான விடுதியின் உரிமையாளர், மேலாளர், பவுன்சர்கள் மற்றும் போதையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் என சுமார் 140 பேரை போலீஸார் கைது செய்து, அந்த மதுபானக் கூடத்துக்கும் சீல் வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில், மதுபானக் கூட நிர்வாகத்தினர் பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் பெண்களின் தகவல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து, அதில் அவர்களுக்குப் பிடித்த பெண்களைத் தேர்வு செய்து கொண்டு, தங்கள் விடுதியில் ஜோடியாக வந்து நடனமாடி, மது விருந்தில் பங்கேற்கச் செய்ய எனத் தனியாக கட்டணமே வசூலித்து, செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது.

கைது

கடந்த மாதமும், இதேபோல ஹைதராபாத்தில் உள்ள 5 மதுபானக் கூடங்களில் கலால் துறை மற்றும் தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு (டி.ஜி.என்.ஏ.பி) அதிரடி சோதனை நடத்தியதில் ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், மாதப்பூர் மற்றும் கச்சிபௌலி ஆகிய இடங்களில் பல இளம்பெண்கள் மற்றும் போதையில் திளைத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதும், அவர்களில் 33 பேருக்கு அதிநவீன கருவிகள் கொண்டு போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில், 4 பேர் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. மேலும், மதுபானக் கூடத்தில் மது வகைகளை பரிமாறிய ஒரு நபர் 18 வயது நிறைவடையாத இளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத... மேலும் பார்க்க

``ஓவர் போதையில் இருந்ததால்..." - போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வ... மேலும் பார்க்க

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்; கிராம மக்களிடம் சிக்கிய மின் வாரிய ஊழியர் கைது!

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாய் பேச முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர். அப்பகுதியை சேர்ந்த தம்பதியினர் அந்த பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வளர்ப்பு... மேலும் பார்க்க

ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... 17 வயது சிறுவன் கைது! - நடந்தது என்ன?

கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை செயல்பட்டுவரும் நிலையில், இந்த வ... மேலும் பார்க்க