செய்திகள் :

10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!

post image

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார்.

டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜார்னலிஸ்ட் அசோசியேசன்) விருது நிகழ்வில் பங்கேற்ற ஷிவம் துபே இந்த அறிவிப்பினைக் கொடுத்தார்.

டிஎன்எஸ்ஜேஏ அளிக்கும் 30 ஆயிரத்துடன் ஷிவம் துபே 70 ஆயிரத்தை அளிக்கிறார். அதனால் இளம் தமிழ்நாட்டு வீரர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்குமென பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய ஷிவம் துபே, “தினமும் உழைக்க வேண்டுமென நினையுங்கள். நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விடாதீர்கள்.

இந்தப் பணம் உங்களுக்கு மிகவும் சிறியது என்றாலும் நிச்சயமாக உதவிகரமானதாக இருக்கும். கடின உழைப்புதான் உங்களை முன்னேற்றும்.

இந்தமாதிரியாக மும்பையில் செய்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் இப்படி செய்கிறார்களா எனத் தெரியவில்லை.

சிறிய தொகையாக இருந்தாலும் இளம் வயதில் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

உதவித்தொகைப் பெறுபவர்கள்

பிபி அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கேஎஸ் வெனிஷா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெள்ளச்சாமி (குண்டு எறிதல்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜெயந்த் ஆர்கே, எஸ் நந்தனா (கிரிக்கெட்), கமலி பி (அலைச்சறுக்கு), ஆர் அபிநயா, ஆர்சி ஜிதின் அர்ஜுனன் (தடகளம்), ஏ தக்‌ஷிந்த் (செஸ்).

சிஎஸ்கே அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வருகிறது.

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஏப்ரல் 20) சில்ஹட்டில்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லாட்டருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளில் ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 25 ரன்கள் பின் தங்கியுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு... மேலும் பார்க்க

பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..

2025 - 26 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ருதுராஜ் ஜெய்க்வாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.கடந்தாண்டு பட்டியலில் இருந்த ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பரத், ஜித்தேஷ் சர்மா, ஆ... மேலும் பார்க்க

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம்... மேலும் பார்க்க

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க