செய்திகள் :

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நீக்கம்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், பந்துவீச்சுப் பயிற்சியாளர் திலீப் மற்றும் உதவிப் பணியாளர் சோஹம் தேசாய் ஆகியோரின் மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட பார்டர் - காவஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் விமர்சனத்துக்குள்ளாகினர்.

மேலும், பயிற்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அபிஷேக் நாயரை பொறுப்பில் இருந்து நீக்க பிசிசிஐ முன்வந்ததாக கூறப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயரை இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 8 மாதங்களே ஆகிறது.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியாவை தொடர்புகொண்டு கேள்வி எழுப்பிய பிடிஐ செய்தி நிறுவனத்திடம், பதவி நீக்கத்தை அவர் மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை.

மேலும், விரைவில் முடிவுகள் உறுதி செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜூன் மாதம் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியுடன், புதிய பயிற்சியாளர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

46 வயதில் தந்தையான ஜாகீர் கான்! குவியும் வாழ்த்துகள்!

முன்னாள் இந்திய வீரரும் லக்னௌ அணியின் ஆலோசகருமான ஜாகீர் கான், அவரது மனைவி சஹாரிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இடதுகை வேகப் பந்துவீச்சாளரான ஜாகீர் கான் 2017இல் ஓய்வு பெற்றார். பிறகு மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிப்பு!

அமெரிக்காவில் நடைபெறும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் போட்டிகளுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக... மேலும் பார்க்க

முதல் முறையாக டி20 தொடருக்காக வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

இருதரப்பு தொடருக்காக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட த... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ஐசிசியின் சார்பில் விருது வழங்கப்பட்ட... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ் ஐபிஎல் சென்னை, பெங்களூரு அணிகளுக்கு விளையாடியதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். சர்... மேலும் பார்க்க

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் விலகல்!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின... மேலும் பார்க்க