செய்திகள் :

10 நிமிஷ தாமதம்: விமானத்தை தவறவிட்டதால் தப்பிய பெண்!

post image

அகமதாபாத் விமான நிலையத்தை அடைய 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டு, விமானத்தை தவறவிட்டதால், கோர விபத்தில் இருந்து பூமி செளஹான் தப்பினாா்.

மாணவா் விசாவில் 2 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற இவா், அதன்பிறகு முதல்முறையாக தனது சொந்த ஊருக்கு அண்மையில் வந்திருந்தாா்.

விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் செல்வதற்கு வியாழக்கிழமை ஏா் இந்தியா விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தாா். வீட்டில் இருந்து விமான நிலையம் வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 10 நிமிஷம் தாமதம் ஏற்பட்டது. விமானத்தை பூமி செளஹான் தவறவிட்டதால், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டாா்.

இதனிடையே, அவா் தவறவிட்ட விமானம், சில நிமிஷங்களில் விழுந்து வெடித்து சிதறியது. வீடு திரும்பும் வழியில் இச்செய்தியை அறிந்ததும் தனக்கு உடல் நடுங்கிவிட்டதாக பூமி செளஹான் தெரிவித்தாா்.

‘போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், விமான நிலையத்துக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்தை அடைந்தபோது, பயணத்துக்கான நடைமுறைகள் நிறைவடைந்துவிட்டன. என்னை பயணிக்க அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கோரினேன். ஆனால், அவா்கள் அனுமதிக்கவில்லை. இதனால், நான் அதிருஷ்டவசமாக உயிா் தப்பியுள்ளேன். விமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளால் அதிா்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை’ என்றாா் பூமி செளஹான்.

மணிப்பூரில் விடிய விடிய சோதனை: ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் பாதுகாப்புப்படையினரின் தீவிர சோதனையில் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 13 இரவு தொடங்கி ஜூன் 14 காலை வரையில் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் காவல் துற... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா கூடுதலாக ரூ. 25 லட்சம் அறிவித்துள்ளது.ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான ந... மேலும் பார்க்க

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க இன்றே கடைசி நாள்!

ஆதார் விவரங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன்(ஜூன் 14) நிறைவடைகிறது.ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவர்கள் உடனடியாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் அற... மேலும் பார்க்க

கோயில் மீது மாட்டிறைச்சி சம்பவம்- அசாமில் 38 பேர் கைது

துப்ரி மாட்டிறைச்சி சம்பவத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் துப்ரி பகுதியில் உள்ள அனுமன் கோயிலின் மீது கடந்த 7ஆம் தேதி மர்ம நபர்கள் பசு மாட்... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்... மேலும் பார்க்க