செய்திகள் :

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

post image

குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில், அரசு சார்பில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட்டில் உள்ள ஆத்மியா கல்லூரியில், இன்று (ஜூலை 25) நடைபெற்ற நிகழ்ச்சியில், 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கையானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசினால் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் ஹர்ஷ் சாங்வி கூறியதாவது:

“நாம் இன்று 185 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கியுள்ளோம். இவர்களில், பெரும்பாலானோரது குடும்பங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களுக்கு இடையில் வாழ்ந்து வந்தனர். அவர்களது, மகள்கள் பள்ளிக்கூடங்கள் செல்வதற்குக் கூட அச்சப்பட்டதாக, அவர்கள் என்னிடம் கூறினர்” என்று அவர் பேசியுள்ளார்.

கடந்த, 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலம், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவினுள் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு, குடியுரிமைப் பெற முடியும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தவறான விடியோக்கள்: 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

The Gujarat government has issued special certificates of Indian citizenship to 185 Pakistani refugees.

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க