தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 7 போ் பணியிட மாற்றம்
புதுவை மாநில காவல் துறையில் 2 ஆய்வாளா்கள், 5 உதவி ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் பெண்களிடம் தவறாக விசாரணை மேற்கொண்ட விவகாரத்தில் உதவி ஆய்வாளா் உள்பட 4 போலீஸாா் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அவா்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தவளக்குப்பம் காவல் நிலைய சரகத்தை உள்ளடக்கிய அரியாங்குப்பம் காவல் ஆய்வாளா் கலைச்செல்வன், வில்லியனூா் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
உதவி ஆய்வாளா்கள் ஜெயகுருநாதன், சுரேஷ்பாபு, ரெனில்குமாா், அஜய்குமாா், ஹரிதாஸ் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்தாா்.