செய்திகள் :

2026 இல் அதிமுக தலைமையிலான மக்களாட்சி அமைவது உறுதி: இபிஎஸ்

post image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, தருமபுரி பாப்பிரெட்டிபட்டி தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே பிரசார வாகனத்தில் இருந்தவாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது, பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபுறம், முதலீட்டை ஈர்க்கிறேன் என்ற பெயரில் வெளிநாட்டுப் பயணம் செல்கிறார். இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா? என்றால், இல்லை என்பதே மக்களின் விண்ணைப் பிளக்கும் பதில்.

இவர் இப்படி என்றால், இவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், கரூர் சம்பவத்தின் போது கூட, சம்பிரதாய போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு உல்லாசச் சுற்றுலா சென்றுவிட்டார்.

மக்கள் மீது துளியும் அக்கறை இல்லாத இவர்கள் ஆட்சி செய்தால், உருப்படுமா?

இப்படிப்பட்ட மக்கள் விரோத திமுக குடும்ப ஆட்சியாளர்களை விரட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக தலைமையிலான மக்களாட்சியை நிறுவுவார்கள். இது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்து பேசினார்.

எதிர்ப்பு உணர்வோடு மக்கள்

பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை மறந்த திமுக ஆட்சி மீது தருமபுரி தொகுதி மக்கள், மிகுந்த எதிர்ப்பு உணர்வோடு உள்ளனர்.

பாதுகாப்பை வழங்கத் தவறிய திமுக அரசு

கரூர் சம்பவம் நம் தேசம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அடிப்படை பாதுகாப்பை கூட வழங்கத் தவறிய திமுக அரசுக்கு இது மிகப்பெரிய தலைகுனிவு.

முதலமைச்சர் ஆளே இல்லாத இடத்தில் சென்றால் கூட கொடுக்கும் பாதுகாப்பு, பொதுமக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு ஏன் கொடுப்பது இல்லை?

அரசு உயர் அதிகாரிகளை வைத்து கரூர் துயரம் பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். இது ஒரு நபர் ஆணைய விசாரணையை தவறாக வழிநடத்துகின்ற மற்றும் அவமதிக்கும் செயல்.

செந்தில் பாலாஜிக்கு ஏன் இந்த பயம்?

செய்தியாளர் சந்திப்பு நடத்தும் செந்தில் பாலாஜி பேச்சில் பயம் தெரிகிறது. ஏன் இந்த பயம்? பதற்றம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

இவ்வளவு நடந்தும், ஸ்டாலின் திருந்திய பாடில்லை என்பதே அவரது அரசின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.

2026-இல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, தவறிழைத்தோருக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

கரூர் விவகாரதில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் நினைவு நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அ... மேலும் பார்க்க

விஜய் அரசியலில் நடிக்க அமித் ஷாவுடன் ஒப்பந்தம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திருநெல்வேலி: திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், இப்போது அரசியலில் நடிப்பதற்காக அமித் ஷாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளாா் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப்பணிகள் முழுவிவரம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 737.88 கோடி செலவிலான 109 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும்,150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 50,752 பயனாளிகளுக... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 30-ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பக... மேலும் பார்க்க

210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்: எடப்பாடி பழனிசாமி

தருமபுரி அரூர் தொகுதியில் கூடியுள்ள கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திரும்பி பார்க்க வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த கூட்டம் என்று அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்: தெற்கு ரயில்வே சாதனை!

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய... மேலும் பார்க்க