செய்திகள் :

11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே... கே.எல்.ராகுல் கூறுவதென்ன?

post image

டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் கடந்த 11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். கடந்த 11 ஆண்டுகளில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11 சதங்கள் (மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய சதத்தையும் சேர்த்து) விளாசியுள்ளார். இருப்பினும், சொந்த மண்ணில் அவர் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே விளாசியுள்ளது குறித்து கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் ஏன் அதிக சதங்கள் அடிக்கவில்லை என்பது உண்மையில் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த ஓராண்டாக என்னுடைய பேட்டிங்கில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக நினைக்கிறேன். நாளுக்கு நாள் என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூடுதல் வேகம் மற்றும் பௌன்சர்கள் உள்ள ஆடுகளங்களில் விளையாடும்போது, போட்டிகள் மிகுந்த சவாலளிப்பதாக இருக்கும். ஆனால், சொந்த மண்ணில் விளையாடும்போது பிளேயிங் லெவனில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஃபீல்டிங் பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருப்பார்கள். அதனால், பேட்டர்கள் ஒன்று, இரண்டு என ரன்கள் சேர்க்க வேண்டியிருக்கும். எளிதில் பவுண்டரிகள் அடிக்க முடியாது. ஒன்று, இரண்டு என ரன்கள் எடுத்து விளையாடுவதில் என்னுடைய உழைப்பைக் கொடுத்து வருகிறேன். கடந்த ஓராண்டாக இதில் கவனம் செலுத்தி வருகிறேன். சொந்த மண்ணில் இத்தனை ஆண்டுகளாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தத் தவறியதாக நினைக்கிறேன் என்றார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் முறையாக சொந்த மண்ணில் சதம் விளாசியிருந்தார். அதன் பின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் சதம் விளாசி சொந்த மண்ணில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian batsman KL Rahul has said that he has scored only two centuries in Test matches at home in the last 11 years.

இதையும் படிக்க: முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபா... மேலும் பார்க்க

தனது முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியதை இந்திய ராணுவத்துக்கு இளம் வீரர் துருவ் ஜுரெல் சமர்ப்பித்துள்ளார்.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; இந்தியா 286 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில்... மேலும் பார்க்க

ஆசாத் காஷ்மீரா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா? சர்ச்சையில் சிக்கிய முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஆசாத் காஷ்மீர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர் பேசிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற... மேலும் பார்க்க

மழையினால் கைவிடப்பட்ட 2-ஆவது டி20: 8 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் ஆஸி.!

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கைவிடப்பட்டது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 2.1 ஓவர்களில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள... மேலும் பார்க்க

ஜடேஜா - துருவ் ஜுரேல் அசத்தல் அரைசதம்: வலுவான நிலையில் இந்தியா!

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ... மேலும் பார்க்க