செய்திகள் :

‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்‌ஷய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்!

post image

நடிகர் அக்‌ஷய் குமாரின் மகளிடம் ஆடைகளைக் களைந்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றச் சொல்லி இணையவழியில் சில மர்ம நபர்கள் எல்லை மீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனில் இணையவழி விளையாட்டில் ஈடுபட்டிருந்த அக்‌ஷய் குமாரின் பதின்பருவ மகளிடம் ‘உன்னுடைய நிர்வாணப் படத்தை பதிவேற்று’ என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

சைபர் செக்யூரிட்டி(இணையவழி பாதுகாப்பு) குறித்து மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அக்‌ஷய் குமார் இந்தத் தகவலை மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் கூறியிருப்பதாவது: “எனது மகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவருடன் இணைந்து உலகின் ஏதோவொரு மூலையில் இருந்தபடி ஆன்லைன் கேமில் பங்கேற்ற ஒருவர், எனது மகளிடம் ‘நீ எங்கிருந்து விளையாடுகிறாய்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அவளோ, ‘நான் மும்பையில் இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் விளையாட்டை தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த நபர் எனது மகளிடம் ‘நீ ஒரு ஆணா? அல்லது பெண்ணா?’ என்று கேட்டுள்ளார். இவள் ‘நான் ஒரு பெண்’ என்று பதிலளித்துள்ளார். அதன்பின் அவர் ஆபாச பதிவுகளை அனுப்பியுள்ளார்.

அதன்பின் சிறிது இடைவெளிக்குப்பின் அந்த நபர், ‘உனது நிர்வாணப் படத்தைக் காட்டு’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதைக் கண்டதும் அதிர்ந்துபோன் எனது மகள் உடனடியாக போனை அணைத்து வைத்துவிட்டு தனது அம்மாவிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்” என்று அக்‌ஷய் குமார் பேசினார்.

சைபர் குற்றவாளிகளின் வலையில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். சைபர் குற்றச்செயல்கள் சாதாரண குற்றங்களைவிடப் பெரியவை, அவற்றை நாம் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அக்‌ஷய் குமார், சைபர் பதுகாப்பு குறித்து பள்ளிகளில் 7 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாயம் வாராந்திர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் விழா மேடையில் அமர்ந்திருந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Akshay Kumar says daughter was asked to send nude photo while playing online game .

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில், கைது செய்யப்பட்ட அவரது சிங்கப்பூர் விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா இந்த விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!

பெங்களூருவில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 97.Legendary journalist and author TJS George passed away... மேலும் பார்க்க

சமூக ஊடக ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்ற சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

சமூக ஊடக ரீல்ஸ் மோகம் இளைஞர்களின் உயிருக்கு எமனாக மாறி வருவதை பிகாரில் இன்று(அக். 3) நடந்த கோர விபத்து நமக்கு உணர்த்துகிறது. பிகாரில் பூர்ணியா அருகே 14 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறார்கள் ஐவர்... மேலும் பார்க்க

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 ப... மேலும் பார்க்க

பால்வளத் துறையில் 70% வளர்ச்சி: அமித் ஷா பாராட்டு!

பால்வளத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் 70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் பார்க்க

ஆக்ராவில் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இருபர் பலி, 6 பேர் மாயம்

ஆக்ரா சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உதங்கன் ஆற்றில் வியாழக்கிழமை சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 2 பேர் பலியானதோடு ஆறு பே... மேலும் பார்க்க