செய்திகள் :

ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்டப்பட்டதால் சர்ச்சை

post image

ராமநாதபுரத்தில் நீண்ட காலமாக ரயில் நிலையம் எதிரே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது போதிய வசதிகளுடன் வாராந்திர சந்தை பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இதையடுத்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என்ற பெயர்களில் இவை பொது மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.

திட்டங்களை துவக்கிய முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் இட நெருக்கடியில் திணறிய புதிய பேருந்து நிலையம் ரூ. 20 கோடி செலவில் விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்தப் புதிய பேருந்து நிலையத்திற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இமானுவேல் சேகரன் உள்ளிட்ட பல தலைவர்களின் பெயரைச் சூட்ட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ராமநாதபுரம் நகர் மன்ற கூட்டத்தில், புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அ.தி.மு.கவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை இல்லாததால் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

விழாவில் பங்கேற்ற பெண்கள்
விழாவில் பங்கேற்ற பெண்கள்

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் 'முத்தமிழறிஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நினைவு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' எனப் பெயர் சூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்தப் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைத்தது முன் கூட்டியே வெளியே தெரிந்தால் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவின்போது எதிர்ப்பு எழும் என நகராட்சி தரப்பில் கருதினர்.

இதனால் பேருந்து நிலையத்தின் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் விழா நாளுக்கு முந்தைய இரவில் அவசர அவசரமாகப் பெயரை எழுதியுள்ளனர். மற்றொரு நுழைவு வாயிலான மேற்கு பகுதியில் அதையும் எழுதவில்லை.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ''சேதுபதி மன்னர்கள் அரசுக்கு வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு சேதுபதி மன்னரது பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர்.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவோம்'' எனக் கூறியுள்ளார்.

இதே போல் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதற்கு தென் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தப் பெயர் பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"நாயக வழிபாடு, கும்பல் மனநிலை; எப்போது முழுமையான தலைவராவார் விஜய்?" - உளவியல் ஆலோசகர் சிந்து பேட்டி

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பயணம், 41 மரணங்களுடன் சோகமான நிகழ்வாக முடிவடைந்திருக்கிறது. இந்த அசம்பாவிதத்திற்கு தவெக-வின் முறைப்படுத்தப்படாத செயல்பாடுகளும் விஜய்யின் கால தாமதமு... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை; ஆதவ் மீது நடவடிக்கை எடுங்கள்" - உயர் நீதிமன்றம்

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதலுக்கு யார் காரணம்? - விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப... மேலும் பார்க்க

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு செல்லாத நீங்கள்...' - ஸ்டாலினை விமர்சிக்கும் அண்ணாமலை

கரூரில் நடந்த சம்பவத்தை விசாரிக்க எம்.பி குழுவை அமைக்கப்பட்டதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தள்ளு, தள்ளு" - வெள்ள பாதிப்பைப் பார்க்கப் போன MP; படகில் வைத்து தள்ளிச் சென்ற மக்கள்

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக சோலாப்பூர், அகில்யா நகர் மற்றும் மராத்வாடா பகுதியில் பல லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.நெற்பயிர்கள், பழப்பயிர்கள் என விவசாயிகளின் ஒ... மேலும் பார்க்க