செய்திகள் :

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

post image

புதுதில்லி: சந்தை தேவையை பூர்த்தி செய்ய வாகனத்தின் உற்பத்தியை நிறுவனம் அதிகரித்ததால், செப்டம்பர் மாதம் மாருதி சுசுகி இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த மாதம் நாடு முழுவதும் சுமார் 2,01,915 கார்களை உற்பத்தி செய்தது. இதுவே செப்டம்பர் 2024ல் இது 1,59,743 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் 12,318 ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார்களை உற்பத்தி செய்த நிலையில், அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 12,155 கார்களாக இருந்தது.

பலேனோ, செலெரியோ, டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளிட்ட சிறிய கார்களின் உற்பத்தியை செப்டம்பர் மாதம் 93,301 கார்களாக அதிகரித்தது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் இது 68,413 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் சியாஸின் உற்பத்தி எதுவும் இல்லை என்றாலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,687 நடுத்தர அளவிலான செடானை விற்பனைக்கு அனுப்பி வைத்தது.

பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஃபிராங்க்ஸ் போன்ற பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 27 சதவிகிதம் உயர்ந்து 79,496 கார்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 62,752 கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஈகோ வாகன உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் 11,702 வாகனங்களிலிருந்து 13,201 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

சூப்பர் கேரி எல்சிவி உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,034 கார்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் அது 3,599 கார்களாக அதிகரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், மாருதி சுசுகி மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 3 சதவிகிதம் அதிகரித்து செப்டம்பரில் 1,89,665 கார்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை என்ற நிலையிலும் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக முடிவடைந்த... மேலும் பார்க்க

பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரித்து 81,207 புள்ளிகளகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 57.95 புள்ளிகள் உயர்ந்து 24,894 ஆக நிலைபெற்றது. இன... மேலும் பார்க்க

டிவிஎஸ் விற்பனை 12% உயா்வு

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12 சதவீதம் உயா்ந்தது. இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாத... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புக்கான கட்டணம்: ஐஓபி தள்ளுபடி

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கு விதிக்கப்படும் கட்டணங்களை இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து வங்கி ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 85,120 -க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்துள்ளது.இதன்மூலம், தங்கத்தின் விலை கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 2,000 அதிகரித்துள்ளது, ரூ. 87 ஆய... மேலும் பார்க்க