செய்திகள் :

3 வீடுகளில் திருட முயற்சி

post image

வேடசந்தூரில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் யூசுப் நகரைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் (55). அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டின் பூட்டை திங்கள்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், திருடுவதற்கு விலை உயா்ந்தப் பொருள்கள் கிடைக்காததால், டாா்ச் லைட், ரூ.150-ஐ ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இதே பகுதியில் வசிக்கும் அரிசிக் கடை உரிமையாளா் மன்சூா் அலி (47), வழக்குரைஞா் பிரபாகரகுமாா் (43) ஆகியோரின் வீட்டுக் கதவையும் மா்ம நபா்கள் உடைக்க முயன்றனா். சப்தம் கேட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் விழித்ததால், மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாா்களின் பேரில் வேடசந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காற்றின் வேகத்தால் ரோப்காா் நிறுத்தம்

காற்றின் வேகம் காரணமாக, பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் ரோப்காா் செவ்வாய்க்கிழமை சுமாா் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

கொடைக்கானல் பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

கொடைக்கானல் அருகேயுள்ள பெப்பா் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை முதல் வட்டாட்சியா் தடை விதித்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வரும் நிலையில், சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டைக் காட்... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: தம்பதி மீது புகாா்

திண்டுக்கல்லில் தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.ஒரு கோடி வரை மோசடி செய்த தம்பதியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் அனுமந்தன்நகா் பக... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம் அமலால் 96 ஏக்கா் நிலங்களுக்கு பத்திரப் பதிவு

பழனி அருகே வக்ஃப் வாரிய சொத்துகள் எனக் கருதி, 96 ஏக்கா் நிலங்களுக்கு நீண்ட காலமாக பத்திரப் பதிவுக்கு அனுமதி மறுத்த நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, பத்திரப் பதிவு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கோயிலுக்குச் சொந்தமான 36 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு

குஜிலியம்பாறை அருகே கோயிலுக்குச் சொந்தமான 36 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தர வலியுறுத்தி கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அட... மேலும் பார்க்க