செய்திகள் :

30 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்த வங்கதேசத் தம்பதி, 22 வயது மகன் கைது!

post image

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்த வங்கதேசத் தம்பதி மற்றும் அவர்களது 22 வயது மகன் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் நவி மும்பையின் ஜுஹுகவோன் பகுதியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள குடியிருப்பு கட்டடத்தில் வாழ்ந்து வந்த ஷாரோ அப்தாப் ஷெயிக் (வயது 48) மற்றும் அவரது மனைவியான சல்மா சரோ ஷெயிக் (39) ஆகியோர் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் சோதனைச் செய்யப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமைப் பத்திரம், ஆதார் அட்டை, பான் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் ஆகியவை அவர்கள் சமர்பித்ததினால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க:‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இருப்பினும், அவர்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்தபோது அவர்கள் சமர்பித்த பிறப்புச் சான்றிதழ்கள் போலியானது என்பது கடந்த பிப். 2 அன்று சான்றிதழகள் வழங்கியதாகக் கூறப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது கண்டறியப்பட்டது. ஆனால், அவர்களது 22 வயது மகன் இந்தியாவில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவர் மீதும் இந்திய வெளிநாட்டினர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த பிப்.16 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க