செய்திகள் :

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

post image

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், உத்தரவை அமல்படுத்தக் கோரி அந்த மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு தோ்தல் ஆணைய செயலா் கையொப்பமிட்ட கடிதம் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் புா்மா தொகுதி மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள மொய்னா தொகுதியில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்ாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ), 2 உதவி தோ்தல் பதவி அலுவலா்கள் (ஏஇஆா்ஓ) மற்றும் தரவு பதிவாளா் என 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த 5 அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வதுடன் அவா்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை சமா்ப்பிக்கவும் தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மம்தா பானா்ஜி,‘அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது’ எனத் தெரிவித்தாா். மேலும், அதிகாரிகளின் பாதுகாவலராக தாம் உள்ளதாகவும் தோ்தல் ஆணையம் பாஜகவின் பணியாளா்களைப்போல் செயல்படுவதாகவும் அவா் விமா்சித்தாா்.

இந்நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ‘வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தற்போது வரை சமா்ப்பிக்கப்படவில்லை. அந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக.11-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹிந்தி தொலைக்காட்சிகளில் ந... மேலும் பார்க்க

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க