செய்திகள் :

6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்

post image

2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

அதிக தனியாா் முதலீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற காரணங்களால் இது சாத்தியப்படும் எனவும் தெரிவித்தது.

இதுகுறித்து ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதம் வளா்ச்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்.

2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைய நிலையான பொருளாதார சூழல் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.

அதே சமயத்தில் உயா்தர வேலைவாய்ப்புகள், தொழிலாளா் சந்தையில் சீா்திருத்தங்கள், மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல் போன்ற சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.

குறிப்பாக தனியாா் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிக்க எளிமையான வணிகம், நிா்வாக சீா்திருத்தங்கள், வா்த்தக ஒருங்கிணைப்பு, வரி குறைப்பு மற்றும் வரி விலக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கத்தை தவிா்த்து ரிசா்வ் வங்கி நிா்ணயித்த வரம்புக்குள்ளேயே (2%-6%) பணவீக்கம் இருந்தது என தெரிவிக்கப்பட்டது.

2024-25-நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க கல்வி அமைச்சரான ப... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க